Welcome to the world of Web-logs! Hang around here for no-worry stuff from moral stories to gossips, politicis to current affairs, sports to games, films to documentaries, spiritual to management, yoga to laziness - everything you find around you in the form of fresh Blogs, almost, everyday!
Sunday, 31 March 2024
Tax Terrorism - How far is it true?
Sunday, 17 March 2024
புதுமை புதிர்: குணா - பார்த்த விழி
புதுமை புதிர்: குணா - பார்த்த விழி
- Decoding the visuals on what the Director wanted to say and how Raja details them through the music.
- Then, as usual decoding of notes
- Then, the Gati-Bhedam he used here (cross rhythms)
Sunday, 10 March 2024
இயற்கையின் மடியில் இளையராஜாவின் இசை
பகவானின் படைப்பு அலாதியானது. இரண்டு நாட்களும் ஒரே மாதிரியானவை அல்ல, ஏன், இரண்டு மணிநேரம் கூட இல்லை; இரண்டு மணித்துளிகள் கூடத்தான். உலகம் முழுவதையும் உருவாக்கியதிலிருந்து எந்த படைப்பும் ஒரே மாதிரி இருந்ததில்லை, இவ்வளவு ஏன், ஒரு மரத்தின் இலைகள் கூட வேறுபட்டே இருக்கும். எந்த ஒரு கலைஞனின் உண்மையான படைப்பும், இயற்கையைப் போலவே, அனைத்தும் ஒன்றுக்கொன்று வேறுபட்டே இருக்கும். இது இசைக்கும் பொருந்தும். ஏழு ஸ்வரங்களின் (12 ஸ்வரஸ்தானங்கள்) கலவையைத் தவிர இசை ஒன்றும் இல்லை ஆனாலும், ஒவ்வொரு இசையமைப்பும் தனித்துவமானது. ஏறக்குறைய அனைத்து படைப்பாளிகளும் அல்லது படைப்பாற்றலால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களும் இயற்கையிலிருந்து ஊக்கம் பெறுவார். இயற்கை அவரக்ளுக்கு ஸ்வாசம் போன்றது. இன்று நம்மை இயற்கையின் மடிக்கு நேராக அழைத்துச் செல்லும் ஒரு தலைசிறந்த படைப்பினை அலசப்போகிறோம்.
இளையராஜா, 1976 ஆம் ஆண்டு திரைப்பட இசை உலகில் நுழைந்தபோது, திரைப்பட இசையில் ஒரு புரட்சி செய்தார். அவர் இந்திய பாரம்பரிய இசை, நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசை ஆகியவற்றில் உள்ள நுணுக்கமான இசைகூற்றுக்களை கலவையாக்கி அனைத்து வடிவங்களையும் அற்புதமாக ஒன்றிணைத்து மிகவும் தனித்துவமான மற்றும் துடிப்பான இசை வடிவத்தை வழங்கினார். ஆர்கெஸ்ட்ரேஷன் அல்லது ஒருங்கிணைப்பு போன்ற வார்த்தைகள் இந்திய சினிமா இசையில் புதிய அர்த்தங்களைப் பெற்றன என்றால் அது மிகையாகாது.
"இயற்கையின் மடிக்கு நேராக அழைத்துச் செல்லும் ஒரு தலைசிறந்த படைப்பினை அலசப்போகிறோம்" என்று மேலே சொன்னோமல்லவா? அது ‘அலைகள் ஓய்வதில்லை’ ஆல்பத்தில் வரும் "புத்தம் புது காலை... "என்ற பாடலே. உண்மையில் இந்தப் பாடல் மருதாணி என்ற மகேந்திரன் படத்திற்காக இயற்றப்பட்டது. ஆனால், அந்தப் படம் வெளிவரவில்லை . எனவே, இதுபோன்ற பாடல்கள் பொதுமக்களைச் சென்றடையாமல் போகக் கூடாது என்பதற்காக இந்தப் பாடலை அலைகள் ஓய்வதில்லை ஆல்பத்தில் சேர்க்கப்பட்டது.
இந்தப் பாடல் அப்போது படமாக்கப்படாதது நல்லது. இந்த பாடலுக்கு முழு நீதியை எந்த இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ செய்ய முடியாது என்பதால் அது நல்லது என்று குறிப்பிட்டேன். எந்த தடையும் இல்லாமல், நம் மனோபாவங்களுக்கேற்ப, மனப் படங்களை உருவாக்கி இந்த தலைசிறந்த படைப்பை அனுபவிக்க நாம் சுதந்திரமாக இருக்கிறோம். சமீபத்தில் மேகா படத்தில் டிஜிட்டல் மேம்பாடுகள் மற்றும் மற்றொரு பாடகியான அனிதா பாடி இதனை படமாக்கியிருந்தனர். அவ்வளவு சுகமில்லைதான். ஒரிஜினல், ஒரிஜினல் தானே....
இந்த இசையமைப்பு நடபைரவி என்ற ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. மேற்கத்திய பாரம்பரிய இசையில், நடபைரவி அளவுகோல் மெலோடிக் மைனர் டிசெண்டிங் (Melodic Minor Descending) என்று அழைக்கப்படுகிறது.
சுப்ரமணிய பாரதி விடியலை விவரிக்கும் போது கூறுகிறார்:
"காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேட்டில் சுடர் விடுத்தான்
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னிற்றே..."
உண்மையில் பாரதி கவிதையில் அற்புதமான விஷயங்களை விவாதித்துச் செல்கிறார். அதேபோல் இளையராஜாவும் ‘புத்தம் புதுக் காலை’ பாடலில் அற்புதமான விஷயங்களைப் பேசுகிறார்.
விடியலின் வருகையைப் பறைசாற்றும் பறவைகளின் கீச்சிடும் ஒலியை போல், புல்லாங்குழல் பாடுவதன் மூலம் இசையமைப்பு தொடங்குகிறது. ஒரு சுருள், ஒரு மலர்ச்சி, மற்றும் ஒரு அழகான இசை விரிகிறது. நாம் ஒரு நுரை நிறைந்த கடற்கரையில் நிற்பதாக உணர்கிறோம், இதோ, சூரிய உதயத்தைப் பார்க்கிறோம்! காமாயனியில் ஜெய்சங்கர் பிரசாத் எழுதிய வார்த்தைகளை இங்கே நினைவு கூர்கிறேன் - "சிந்து சேஜ் பர் தாரா வதூ அப், தனிக் சங்குசித் பைதி சி.... (सिंधू-सेज पर धरा-वधू अब तनिक संकुचित बैठी-सी)...அதாவது மணமகள் வெட்கி சிவந்து, படுக்கையின் விளிம்பில் அமர்ந்திருப்பது போல, இந்த சிவந்த சூரியன் இந்த கடல் படுக்கையின் ஓரங்களில் இருப்பதை காண்கிறோம்......
சுமார் 15 வினாடிகள் அந்த குழல், பறவைகளின் கீச்சிடுகின்ற ஒலியை எழுப்பி நம் உள்ளிருக்கும் சோம்பலையும், தூக்கக்கலக்கத்தையும் விரட்டி அடிக்கிறது. அப்பொழுது தான் ரிதம் ஆரம்பமாகும். 5 வினாடி கழித்து stringsன் அட்டகாசம் ஆரம்பமாகும். மெல்லிசை மற்றும் தாளத்தின் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட நாம் இப்போது அதனை தூக்கி சாப்பிடும் வகையில், ஜானகியின் "ஆஹா ஆஹா..." என்று பறவையைப் போல முணுமுணுத்து, பாடத்துவங்கும் போது நாம் அலைகளின் எழுச்சியுடன் செல்கிறோம். பின்னர் synth சிறிது நேரம் விளையாட்டு காண்பிக்கும். 45 வினாடிகள் இந்த முன்னிசை நம்மை எங்கோ கூட்டிச்செல்லும்.
“புத்தம் புதுக் காலை ..” என்று அவர் பாடுவது நெகிழ்ச்சியான அனுபவம். பல்லவி துவங்கும் போது தாள வாத்தியத்தில் டிக் டிக் என்று ஒரே சீரான ஒலி கேட்கும். அது pad drums. இந்த பாடல் ஒலிப்பதிவாகும் நாள் புரு என்கிற புருஷோத்தமன் (முதலில் அவர் ராஜாவிற்கு ட்ரம்ஸ் வாசித்தவர், பின்னர் இசை ஒருங்கிணைப்பாளர் ஆனார். இவரின் சகோதரன் சந்திரசேகர் என்கிற சேகர் தான் இளைய நிலா பாட்டின் கிட்டார் கூற்றுகளை வாசித்தவர்) சிங்கப்பூரிலிருந்து ஒரு புது வாத்தியத்தை கொண்டுவந்திருந்தார் (Pad Drums). இந்த பாடல் ஓலிப்பதிவான பின்பு தனியாக வாசித்து இந்த பாடலில் ஓட்ட வைத்தது ஒரு சிறப்பம்சம். இதில் விசேஷம் என்னவென்றால், வயலினில் இராமசுப்ரமணியமும், செல்லோவில் சேகரும், வயலாவில் பிரபாகரனும் மற்றோரெல்லாம் strings sectionல் சேர்ந்து கலக்குவது இன்பமயம்.
30 வினாடிகள் பல்லவி. பின் இடை இசை. synth மற்றும் குழல். இரண்டு குழல்கள். புல்லாங்குழல் இப்போது காற்றில் பறக்கிறது, அது நம்மைப் போன்ற மனிதர்களின் சோர்வையும் சோம்பலையும் உலுக்கி எடுத்து தூர வீசியடிக்கிறது. இப்போது மற்றுமோர் புல்லாங்குழல், அழகிய வண்ணபொடிகள் கலவையை காற்றில் தூவி தாராளமாக சிதறுவதை காணுவது போல் ஒலிக்கிறது. லீட் மற்றும் பேஸ் குழல்கள். லீட் குழல் நம்மை எங்கோ கூட்டி சென்றால், பேஸ் குழலோ நம்மை கட்டி போடும். பின்னர் கீபோர்டின் பெல்ஸ். இவ்விரண்டும் சம்பாஷணை செய்து கொண்டிருக்கும் போதே stringsன் ஆளுமை துவங்கும். ரிலே ரேஸ் போல ஒரு இசைக்கருவி மற்றொண்டிடம் ஒப்படைத்துவிட்டு நம்மை ஏதோ ஓர் உலகத்திற்கே கொண்டு செல்லும். ஸ்டிரிங்ஸ் இப்போது விளையாடுகிறது. அது சுற்றுப்புறத்தை ஸ்வரக்கோர்வைகளால் பளபளக்க வைக்கிறது. ஒரு இசை விருந்தின் ஆரம்ப அறிகுறிகளை நாம் அறிகிறோம். ஸ்வரங்கள் பூக்களை சிதறி அந்த நறுமணம் தான் இராகமாக ஒலிக்கின்றது.
"பூவில் தோன்றும் வாசம்... அது தான் ராகமோ..." என்று எழுதியதற்காக இராஜா படைத்ததிது. சரணத்தில் மாயாஜாலம் இழைத்தபடி சரிவுகளில் ஏறி அழகை எட்டிப்பார்க்கிறோம். குரல் புல்லாங்குழலின் இடைச்சொல் மற்றும் துடிக்கும் துடிப்புடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் சரணம் முடிந்து, வயலின் இசைக்கும்போது, கீழே ஒரு பள்ளத்தாக்கில் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சியின் ஒரு காட்சியைக் காண்கிறோம். ஜொலிக்கும் நீர் நுரையுடன் பளபளக்கிறது மற்றும் கூழாங்கல் படுக்கையைக் கடக்கிறது. கூழாங்கற்களை ஒட்டிய நீர் நுனிக் கால்களால் அதன் வழியில் வசீகரமான சுழல்களை உருவாக்குவது போன்ற குரல் இப்போது எதிரொலியாக ஒலிக்கிறது. அது நம்மை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. இரண்டாவது இடை இசையில் ஆரம்பமே அட்டகாசம். strings section அமர்க்களம். பின்னர் குழல், synth, ஒரே தொடராக ஒலிக்க இப்போது strings section இரண்டாக பிரிந்து வெவ்வேறு கூற்றுகளை வாசித்து நம்மை கிறங்கடிக்க, ஜானகியின் humming நம்மை மேலும் கெடுக்கும். மிச்சமெல்லாம் போனஸ் தான்.
இந்த இசைக்கோர்வை ஒரு வெல்வெட் போர்வையில் மூடப்பட்டிருக்கும், அதை நம்மால் மறுக்கமுடியாமல் ஆட்கொண்டு அந்த இசையை விரும்பச்செய்கிறது. நாம் ஒரு முழுமையை உணர்கிறோம், அதே நேரத்தில் வெறுமையாக உணர்கிறோம்! புத்தம்புது காலையில் புத்தம்புது கீதங்கள் படைக்கும் அவரது இசையின் அலைகள் ஓய்வதில்லை! மருதாணியின் மணம் நம்மை சீண்டுவது போல், அலைகள் மீண்டும் மீண்டும் வந்து நம் கால்களை கழுவி ஒரு புத்துணர்ச்சியை தருவது போல், ராஜாவின் இசை! இந்த இசையின் அலைகள் என்றும் நிற்காது!
https://www.youtube.com/watch?v=RKbxKRJCiYA
India’s 79th Independence Day: Key Highlights from PM Modi’s Speech
India’s 79th Independence Day: Key Highlights from PM Modi’s Speech On 15th August 2025 , India celebrated its 79th Independence Day , a ...

-
Bhakti, Bhajans & Boundaries: Reflections on a Recent Judgment This morning, a post by Shri Cuddalore Gopi Bhagavatar caught my eye. I...
-
US Imposes 25% Tariff on Indian Imports: Trade Tensions Escalate Amid Geopolitical Crosswinds In a significant development in global trade...